யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், இந்தியா திருச்சி சீனிவாசநகரை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பவானிதேவி உலகநாதன் அவர்கள் 16-12-2024 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சதாசிவம் விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
உலகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
கோபு, பபிதாஸ், பிரசாந்தன், சுதர்சன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பாலசும்பிரமணியம்(மகோ கடைபாலன்), கணேசலிங்கம், சந்திரபாலன், சிவநேசன்(பிரசன்னா), ஞானசீலன் ஆகியோரின் அன்பு சகோதரியும்,
காலஞ்சென்ற தர்மகுலராணி, சற்குணேஸ்வரி, பரமேஸ்வரி, உதயா, அனுசுயா, காலஞ்சென்றவர்களான நாகராசா, இராசம்மா, அருளையா(நாகரெத்தினம்), மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்தினியும்,
நிஸாந்தினி, வினோஜா ஆகியோரின் மாமியும்,
ஹாசினி, அபிபர்மி, ஆருத்திரா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்
