யாழ். நெட்டிலைப்பாய் கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட ஞானசேகரம் கணபதிப்பிள்ளை அவர்கள் 11-12-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, அன்னம்மா தம்பதிகளின் கடைசி மகனும், காலஞ்சென்ற சுப்பையா, இராசம்மா தம்பதிகளின் மருமகனும்,
காலஞ்சென்றவர்களான சபாபதி, கனகலட்சுமி, இரத்தினசிங்கம், மனோன்மணி ஆகியோரின் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான இராசரத்தினம், நாகரத்தினம், செல்லம்மா, பாக்கியம் ஆகியோரின் அருமை மைத்துனரும்,
மீனாம்பிகை ஞானசேகரம்(ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
ஞானரூபி கருணாகரன்(Ruby’s Tuition, Ilford-லண்டன், பிரித்தானியா), மாவீரன் ஞானசொரூபன், ஞானச்செல்வி சிங்கேஸ்வரன்(Senior Manager, Canadian Red Cross-ஒட்டாவா, கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கருணாகரன்(ராஜன்), சிங்கேஸ்வரன் ஆகியோரின் அருமை மாமனாரும்,
மாதுரி, சங்கவி, வத்சலன், பானுகோபன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.